8th ஓடை வினா விடை

1. ஓடை எவ்வாறு  ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார் ?

விடை : ஓடை கற்களில் உருண்டும் ,தவழ்ந்தும் ,நெளிந்தும் , சலசல, என்ற ஒலி எழுப்பியபடி ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார் .

2. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார் ?

விடை : ஓடை எழுப்பும் ஒலிக்கு சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும்    வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப  முழங்கும் முழவையொலியை உவமையாகக்   கவிஞர் வாணிதாசன் கூறுகிறார் 

3. வாணிதாசன் இயற்றிய நூல்கள் யாவை ?

விடை : தமிழச்சி , கொடிமுல்லை , தொடுவானம் , எழிலோவியம் , குழந்தை இலக்கியம் 

4. ஓடையின் பயன்கள் யாவை ?

விடை : நன்செய் ,புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தனது பயிர்களைச் செழிக்கச் செய்கிறது அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது .

5. ஓடையின் கொடையைப் பற்றி வாணிதாசன் கூறுவது யாது ?

விடை : நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது  ஒடித்

தன் உழைப்பை கொடையாகத் தருகிறது .

Comments